கோயிலில் பிரசாதம் சாப்பிட்ட 11 பேர் உயிரிழப்பு : இருதரப்பு மோதலால் விஷம் கலந்திருக்க வாய்ப்பு

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு கோயில் திருவிழாவில் பிரசாதம் சாப்பிட்டதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது
கோயிலில் பிரசாதம் சாப்பிட்ட 11 பேர் உயிரிழப்பு : இருதரப்பு மோதலால் விஷம் கலந்திருக்க வாய்ப்பு
x
சாம்ராஜ் மாவட்டம், கெனூரில் உள்ள அம்மன் கோயில் திருவிழா  தொடர்பாக இருபிரிவினரிடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது ..  இந்நிலையில்,  கோவில்  திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில்,  பிரசாதமாக வழங்கப்பட்ட  தக்காளி சாதத்தை சாப்பிட்ட, 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 3 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களில் மேலும் 4 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 70-க்கும் அதிகமானோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில், மகேஷ், சிஞ்சி ஆகிய இருவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்