சசிகலாவிடம் விசாரணை தொடங்கியது...

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவிடம் வருமான வரித்துறையினரின் விசாரணை தொடங்கியது.
x
கடந்த ஆண்டு சசிகலா குடும்பத்தினர் தொடர்புடைய இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். அப்போது ஏராளமான சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக திவாகரன், விவேக், கிருஷ்ண பிரியா உள்ளிட்டோரிடம் வருமான வரித் துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். இந்நிலையில், வீரராகராவ் தலைமையிலான 7 பேர் கொண்ட  வருமான வரித்துறை அதிகாரிகள், பெங்களூரு சிறையில்  உள்ள சசிகலாவிடம் விசாரணையை தொடங்கியுள்ளனர். சசிகலா பங்குதாராக உள்ள நிறுவனங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை 5 பைகளில் எடுத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்காக சிறையில் தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படுகிறது. இன்றும், நாளையும் விசாரணை நடத்த வருமான வரித்துறையினர் முடிவு செய்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்