ரூ.70 லட்சம் மதிப்பிலான சொகுசு கார்கள் பறிமுதல் - திருடிய நபர் கைது...

ஆந்திர, கர்நாடகா மாநிலங்களில் சொகுசு கார்களை திருடி தமிழகத்திற்கு கொண்டு சென்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரூ.70 லட்சம் மதிப்பிலான சொகுசு கார்கள் பறிமுதல் - திருடிய நபர் கைது...
x
ஆந்திர, கர்நாடகா மாநிலங்களில் சொகுசு கார்களை திருடி தமிழகத்திற்கு கொண்டு சென்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 7 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆந்திர மாநிலம், சித்தூரில் காவல்துறை கண்காணிப்பாளர் விக்ராந்த் பாட்டீல், கங்கவரம் மண்டலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது 7 கார்களை ஒன்றன் பின் ஒன்றாக வந்ததாக கூறினார். இதனை தடுத்தி நிறுத்தியதால், அதனை ஓட்டி வந்தவர்கள் தப்பியோடியதாகவும், ஒருவர் மட்டும் சிக்கியதாகவும்  விக்ராந்த் பாட்டீல் கூறினார். கைது செய்யப்பட்ட 
நபரின் பெயர் தினேஷ்குமார் என்றும், கார்களை திருடி ஷோரூம்களில் விற்பனை செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்ததாகவும் சித்தூர் எஸ்.பி விக்ராந்த் கூறினார். பறிமுதல் செய்யப்பட்ட கார்களின் மதிப்பு 70 லட்ச ரூபாய் என்றும் அவர் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்