தெலங்கானா, ராஜஸ்தானில் இன்று வாக்குப்பதிவு...

தெலங்கானா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில், இன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.
தெலங்கானா, ராஜஸ்தானில் இன்று வாக்குப்பதிவு...
x
வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கி, மாலை 5 மணிக்கு முடிவடைகிறது. இரு மாநிலங்களிலும் தேர்தலுக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தெலங்கானாவில் மொத்தம் 119 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. தேர்தலில் வெற்றிபெற ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி, காங்கிரஸ் - தெலுங்கு தேச கூட்டணி மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தம் உள்ள 200 சட்டப்பேரவை தொகுதிகளில் 199 தொகுதிகளுக்கு ​இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. மீதமுள்ள ஒரு தொகுதியில், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் மரணம் அடைந்ததால் அங்கு தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.  



Next Story

மேலும் செய்திகள்