ரங்கசாமி கட்சியின் எம்.எல்.ஏ தகுதி நீக்கம் - புதுச்சேரி சட்டப்பேரவை செயலர் அறிவிப்பு

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை எதிரொலி
ரங்கசாமி கட்சியின் எம்.எல்.ஏ தகுதி நீக்கம் - புதுச்சேரி சட்டப்பேரவை செயலர் அறிவிப்பு
x
புதுச்சேரி தட்டான்சாவடி தொகுதியின் எம்எல்ஏ அசோக் ஆனந்த் மற்றும் இவரது தந்தை ஆனந்தன் இருவருக்கும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ஓராண்டு சிறைத்தண்டனை மற்றும் ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும்  ஒரு கோடியே 74 லட்ச ரூபாய் சொத்துகளை பறிமுதல் செய்யவும் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், அசோக் ஆனந்தை எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்வதாக, புதுச்சேரி சட்டப்பேரவை செயலாளர் வின்சென்ட் ராயர் அறிவித்துள்ளார். கடந்த 30ம் தேதியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், தட்டாஞ்சாவடி தொகுதி காலியாக உள்ளதாகவும் அரசிதழில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்