"திறமை, வீரம், கட்டுப்பாட்டில் சிறந்தவர்கள்" - ராணுவ வீரர்களுக்கு பிரதமர் மோடி புகழாரம்

நாட்டின் 125 கோடி மக்களுக்கும், ராணுவத்தினர் பாதுகாப்பாக உள்ளதாக பிரதமர் நரேந்திரமோடி புகழாரம் சூட்டி உள்ளார்.
திறமை, வீரம், கட்டுப்பாட்டில் சிறந்தவர்கள் - ராணுவ வீரர்களுக்கு பிரதமர் மோடி புகழாரம்
x
உத்தரகாண்ட் மாநிலத்தி​ல் உள்ள ஹரிசில் ராணுவ முகாமில் பாதுகாப்பு படை வீரர்களுடன் இணைந்து பிரதமர் மோடி தீபாவளியை கொண்டாடினார். வீரர்களுக்கு தன் கையால், இனிப்பு ஊட்டி, தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார். வீரர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர், நாட்டின் ஒவ்வொரு பகுதியையும் பாதுகாப்பதுடன் எல்லைகளையும் பாதுகாத்து வருவதாக பாராட்டு தெரிவித்தார். நமது ராணுவ வீரர்கள் திறமை - வீரம் - கட்டுப்பாட்டில் மிகவும் சிறந்து விளங்குவதாகவும், உலக நாடுகளின் பாராட்டை பெற்றுள்ளதாகவும் பிரதமர் மோடி, புகழாரம் சூட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்