கெஜ்ரிவால் பங்கேற்ற பாலம் திறப்பு விழாவில் மோதல்

பாஜக எம்.பி. - ஆம் ஆத்மி கட்சியினரிடையே தள்ளுமுள்ளு
கெஜ்ரிவால் பங்கேற்ற பாலம் திறப்பு விழாவில் மோதல்
x
டெல்லியில் பாலம் திறப்பு விழாவில் மோதல் ஏற்பட்டது. டெல்லியின் வடகிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளை இணைக்கும் விதமாக யமுனை ஆற்றின் மீது 'சிக்னேச்சர் பாலம்' அமைக்கப்பட்டுள்ளது. அதை முதலமைச்சர் கெஜ்ரிவால், துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா ஆகியோர் திறந்து வைத்தனர். முன்னதாக, டெல்லி பாஜக தலைவரும் வடகிழக்கு தொகுதியின் எம்.பியுமான மனோஜ் திவாரி, விழா நடந்த இடத்துக்கு வந்தார். பல ஆண்டுகளாக கிடப்பில் இருந்த பாலப்பணிகளை தான் தொடங்கி வைத்ததாகவும், அதற்கு கெஜ்ரிவால் திறப்பு விழா நடத்துவதாகவும் அவர் விமர்சித்தார். இதையடுத்து ஆம்ஆத்மி மற்றும் பாஜகவினர் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

Next Story

மேலும் செய்திகள்