இந்தியாவில் உருவாகி வரும் பிரமாண்ட சிலைகள்

உலகளவில் கவனத்தை ஈர்க்கும் முயற்சி
இந்தியாவில் உருவாகி வரும் பிரமாண்ட சிலைகள்
x
இரண்டாயிரத்து 500 தொழிலாளர்கள் மற்றும் 2 ஆயிரத்து 990 கோடி ரூபாய் செலவில், இந்தியாவில் உருவாகும் உலகின் மிகப் பெரிய சிலை இது தான்... பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் மாநில முதலமைச்சராக இருந்தபோது, அங்கு 182 மீட்டர் உயரத்தில், இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் சிலை அமைக்கப்படும் என அறிவித்தார். கடந்த 2013-ம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்புக்குப் பிறகு, படேலின் சிலை நிறுவும் பணி தீவிரமடைந்தது.  ஒற்றுமையின் சிலை என, 'Statue of Unity' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தச் சிலையின் வடிவமைப்பு முடியும் நிலையில், உள்ளது. அக்டோபர் 31-ம் தேதி, வல்லபாய் படேலின் பிறந்த நாளன்று, இந்த சிலையை பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார். இந்தச் சிலை, உலகின் மிக உயரமான சிலை என்ற பெருமையைப் பெறப் போகிறது. சிலை திறக்கப்பட்ட பிறகு, இந்தப் பகுதி சுற்றுலாத் தலமாக மாறவுள்ளது. சீனாவில் 128 மீட்டர் உயரமுள்ள புத்தர் சிலையே, தற்போது உலகின் மிகப் பெரிய சிலையாக உள்ளது. விரைவில், சர்தார் படேல் சிலை இந்தப் பெருமையை முறியடிக்க உள்ளது. நர்மதா அணைக்கருகே, ஆற்றுத் தீவான சாதுபேட் என்ற இடத்தில் இந்தச் சிலையை வைக்க ஏற்பாடு நடைபெற்று வருகிறது. சிலையைச் சுற்றி, 20 ஆயிரம் சதுரமீட்டர் பரப்பில் செயற்கை ஏரி அமைக்கப்படுகிறது.இந்நிலையில் தான், இந்த சிலைக்கு போட்டியாக மகாராஷ்டிர பா.ஜ.க. அரசு, சத்ரபதி சிவாஜியின் பிரமாண்ட சிலையை உருவாக்கி வருகிறது.ஆரம்பத்தில், 98 மீட்டர் உயரம் கொண்டதாக, இது திட்டமிடப்பட்டது. ஆனால், வல்லபாய் படேலின் சிலையை விடவும், தற்போது, வீர சிவாஜியின் சிலை 212 மீட்டர் உயரத்தில் வடிவமைக்கப்படுகிறது. சர்தார் வல்லபாய் படலோ, வீர சிவாஜியோ எதுவாக இருந்தாலும், இதன் மூலம், உயரமான சிலைகள் உள்ள நாடுகளின் பட்டியலில், இந்தியா முதலிடம் வகிக்கப்போகிறது.

Next Story

மேலும் செய்திகள்