இந்தியா வந்தார் ரஷிய அதிபர் புதின்...

2 நாள் அரசு முறை பயணமாக ரஷிய அதிபர் விளாடிமீர் புதின் இந்தியா வந்துள்ளார்.
இந்தியா வந்தார் ரஷிய அதிபர் புதின்...
x
தலைநகர் புதுடெல்லியில், புதினை, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் வெளியுறவு துறை உயரதிகாரிகள் அன்புடன் வரவேற்றனர். இந்தியா - ரஷியா உச்சி மாநாட்டில் பங்கேற்கும் புதின், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திரமோடி உள்ளிட்டோரை சந்தித்து பேச திட்டமிட்டு உள்ளார். இந்த பயணத்தின் போது, 36 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்தியாவுக்கு எஸ் - 400 என்ற ஏவுகணைகள் வாங்குவது தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்