மாவோயிஸ்ட் தாக்குதலில் உயிரிழந்த ஆந்திர எம்.எல்.ஏ. உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைப்பு

ஆந்திராவில் மா​வோயிஸ்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்ட எம்எல்ஏ-வின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
மாவோயிஸ்ட்  தாக்குதலில் உயிரிழந்த ஆந்திர எம்.எல்.ஏ. உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைப்பு
x
* ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. கிடாரி சர்வேஸ்வர ராவ், விசாகப்பட்டினத்தில் உள்ள அவரது தொகுதிக்கு  நேற்று சென்றபோது மாவோயிஸ்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். 

* இந்த தாக்குதலில், முன்னாள் எம்.எல்.ஏ. சிவேரி சோமாவும் உயிரிழந்தார். பெண்கள் உட்பட சுமார் 40 மாவோயிஸ்டுகள் கூட்டமாக வந்து இந்த தாக்குதலை நடத்தினர். அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

* இதற்கிடையே, அங்குள்ள தும்ரிகூடா காவல்நிலைய உதவி ஆய்வாளர் அம்மாராவ் சஸ்பெண்ம் செய்யப்பட்டுள்ளார். 

* இந்நிலையில், சர்வேஸ்வர ராவின் உடல், பிரேத பரிசோதனைக்கு பிறகு, இன்று காலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர்,  அரகு பகுதியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி அலுவலகத்தில், பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. 

* விசாகப்பட்டினம் மாவட்டம் பாடேரு பகுதியில் சர்வேஸ்வர ராவ், சிவேரி சோமா இருவரின் இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன. இதற்கிடையே, விசாகப்பட்டினத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்