பெண் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கு - போலி சாமியார் கைது

புதுச்சேரி அருகே பெண் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் அப்பகுதியை சேர்ந்த போலி சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெண் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கு - போலி சாமியார் கைது
x
* புதுச்சேரி அருகே கரிக்கலாம்பாக்கம் பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கிருஷ்ணவேணி என்ற பெண் கோயில் குளக்கரையில் மர்மமான முறையில் கழுத்து அறுக்கப்பட்டு இறந்து கிடந்தார்.

* இதுகுறித்து வழக்கு பதிவு செய்த மங்கலம் போலீசார் தனிப்படை அமைத்து கொலையாளியை தீவிரமாக தேடி வந்தனர். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் என்ற போலி சாமியார்,  பரிகார பூஜை செய்வதாக கூறி கிருஷ்ணவேனியை வீட்டில் உள்ள நகைகளை எடுத்து கொண்டு அருகில் இருக்கும் கோயில் குளக்கரைக்கு வரவழைத்து கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தது தெரிய வந்தது.

* இதனையடுத்து கோவிந்தராஜை  கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 13 சவரன் நகை மற்றும் கொலை செய்ய பயன்படுத்திய கத்தி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.



Next Story

மேலும் செய்திகள்