மத்திய அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரி தற்கொலை

மத்திய அமைச்சர் உமாபாரதியின் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வந்த ராம் மோகன் தனேரியா தற்கொலை செய்து கொண்டார்.
மத்திய அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரி தற்கொலை
x
மத்திய அமைச்சர் உமாபாரதியின் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வந்த, ராம் மோகன் தனேரியா, மத்திய பிரதேசம் போபாலை சேர்ந்தவர். இவருக்கும், மனைவிக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் மனைவியை அடித்ததாக கூறப்படுகிறது. மனைவியின் புகாரின் பேரில், போலீஸார் விசாரணைக்காக காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றபோது, தனது துப்பாக்கியை எடுத்து தனேரியா தனது தலையில் சுட்டுக்கொண்டார். இதில் பலத்த காயமடைந்த தனேரியா, மருத்துவமனை அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்தார். குடும்ப தகராறு காரணமாக மத்திய அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story

மேலும் செய்திகள்