இந்தியாவில் பான் கார்டுகள் பயன்பாடு அதிகரிப்பு

இந்தியாவில் பான் அட்டை பயன்பாடு அதிகரித்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பான் கார்டுகள் பயன்பாடு அதிகரிப்பு
x
* வருமான வரி செலுத்த பான் எனப்படும் நிரந்தர கணக்கு எண் பெற வேண்டும். இதற்காக வருமான வரித் துறையில் விண்ணப்பித்து பான் அட்டை பெறலாம். 

* பண நீக்க நடவடிக்கை, ஜி.எஸ்.டி வரி அறிமுகம்,மற்றும் கருப்பு பணத்திற்கு எதிராக கடுமையான தொடர் நடவடிக்கைகளின் விளைவாக வருமான வரி கட்டுபவர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. 

* கடந்த மார்ச் மாதம் முடிவடைந்த காலாண்டில் ஒரு கோடியே 96 லட்சம் பான் கார்டுகள் வழங்கியிருப்பதாக வருமான வரித்துறை தெரிவிக்கிறது. 

* இதுவரை ஒட்டுமொத்தமாக 37 கோடியே 9 லட்சம் பான் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

* வங்கி கணக்குகள் மற்றும் ஆதார் எண்களை,பான் கார்டுகளுடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

* இரண்டு லட்ச ரூபாய்க்கு மேல் தங்க நகை வாங்க பான் கார்டுகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

* பல்வேறு இதர வணிக பரிவர்த்தனைகளுக்கும் பான் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் பான் கார்டுகள் பயன்பாடு அதிகரித்து வருகிறது... 

Next Story

மேலும் செய்திகள்