வங்கி கணினி சர்வரை முடக்கி ரூ.94.42 கோடி திருட்டு

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள காஸ்மோஸ் கூட்டுறவு வங்கியில் கம்ப்யூட்டர்களை இயக்கும் சர்வரை முடக்கி 94 கோடியே 42 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
வங்கி கணினி சர்வரை முடக்கி ரூ.94.42 கோடி திருட்டு
x
மகாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள காஸ்மோஸ் கூட்டுறவு வங்கியில் கம்ப்யூட்டர்களை இயக்கும் சர்வரை முடக்கி 94 கோடியே 42 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கொள்ளையர்கள், ஆன்லைன் மூலமாக பணத்தை பரிமாற்றம் செய்துள்ளனர். இந்த பணம் ஹாங்காங்கில் உள்ள வங்கிக் கணக்குகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 11ம் தேதி 80 கோடி ரூபாயும், 13ம் தேதி 13 கோடியே 90 லட்ச ரூபாய் பணமும் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட டெபிட் கார்டுகளின் விவரங்களும் திருடப்பட்டுள்ளதாக வங்கி தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தீவிர விசாரணை நடைபெறுகிறது.

Next Story

மேலும் செய்திகள்