26 ஆண்டுக்கு பிறகு நிரம்பியது இடுக்கி அணை

கேரள மாநிலத்தின் இடுக்கி அணை, 26 ஆண்டுகளுக்கு பிறகு முழு கொள்ளவை எட்டியதால், திறந்து விடப்பட்டுள்ளது.
26 ஆண்டுக்கு பிறகு நிரம்பியது இடுக்கி அணை
x
கேரள மாநிலத்தின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், இடுக்கி, கண்ணூர், மலப்புரம்,வயநாடு ஆகிய இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனிடையே இடுக்கி அணையில், மொத்த கொள்ளளவான 2 ஆயிரத்து 403 அடியில், தற்போது 2 ஆயிரத்து 398 அடி நிரம்பியுள்ளது. இதனால் 26 ஆண்டுகளுக்கு பிறகு இடுக்கி அணை திறந்து விடப்பட்டது.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இடுக்கியில் மீட்பு படைகளை கேரள அரசு தயார் நிலையில் வைத்துள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்