வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வீடு - முன்னெச்சரிக்கையால் உயிர் தப்பிய குடியிருப்பு வாசிகள்

மேற்கு வங்கத்தில் தொடர் கன மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் 2,500 க்கும் மேற்பட்ட மக்கள் தங்களின் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வீடு - முன்னெச்சரிக்கையால் உயிர் தப்பிய குடியிருப்பு வாசிகள்
x
மேற்கு வங்கத்தில் தொடர் கன மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் 2,500 க்கும் மேற்பட்ட மக்கள்  தங்களின் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். பங்குரா நகரில் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் கன மழையால் நகராட்சி முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. நேற்று வெள்ளத்தில் இரண்டு மாடி வீடு ஒன்று அடித்து செல்லப்பட்டது.முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் வீட்டில் இருந்தவர்கள் உயிர் தப்பினர்.

Next Story

மேலும் செய்திகள்