தொடர் மழையால் நிரம்பிய கர்நாடக அணைகள் : முதலமைச்சர் குமாரசாமி சிறப்பு வழிபாடு

கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் உள்ள ஹாரங்கி அணையில் முதலமைச்சர் குமாரசாமி சிறப்பு வழிபாடு நடத்தினார்.
தொடர் மழையால் நிரம்பிய கர்நாடக அணைகள் : முதலமைச்சர் குமாரசாமி சிறப்பு வழிபாடு
x
கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் உள்ள ஹாரங்கி அணையில் முதலமைச்சர் குமாரசாமி சிறப்பு வழிபாடு நடத்தினார். கர்நாடகாவில், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, அங்குள்ள கே.ஆர்.எஸ்., கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய நான்கு அணைகளும் முழு கொள்ளவை எட்டி உள்ளன. இதையடுத்து, கர்நாடகா அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் ஒரு லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறக்கபட்டது. 

இந்த நிலையில் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, வருண பகவானுக்கு நன்றி செலுத்தும் விதமாக ஹாரங்கி அணைக்கு நேரில் சென்று, புடவை மஞ்சள் குங்குமம் சீர்வரிசையுடன் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து  வழிபட்டார். 

Next Story

மேலும் செய்திகள்