நியூட்ரினோ ஆய்வகத்தால் அணைகளுக்கோ, கிராமங்களுக்கோ பாதிப்பு இல்லை - மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்

நியூட்ரினோ ஆய்வகத்தால் அணைகளுக்கோ, அருகில் உள்ள கிராமங்களுக்கோ எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
நியூட்ரினோ ஆய்வகத்தால் அணைகளுக்கோ, கிராமங்களுக்கோ பாதிப்பு இல்லை - மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்
x
நியூட்ரினோ ஆய்வகத்தால் அணைகளுக்கோ, அருகில் உள்ள கிராமங்களுக்கோ எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உறுப்பினர் ஜாய்ஸ் ஜார்ஜ் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், 'நியூட்ரினோ ஆய்வகத் திட்டத்திற்கு தேவையான சுற்றுச்சூழல் அனுமதி' பெறப்பட்டுள்ளதாகவும்  நியூட்ரினோ ஆய்வகத்தால் விநாடிக்கு ஒரு மில்லி மீட்டர் என்ற குறைந்த அளவுக்கே அதிர்வு இருக்கும் என்றும் கூறினார். 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் உள்ள வைகை, முல்லை பெரியாறு அணைகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்றும் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்