பொது மேடையில் விவாதிக்க தயாரா? - ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் சவால்

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தம்முடன் பொதுமேடையில் விவாதிக்க தயாரா என மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா, சவால் விடுத்துள்ளா​ர்.
பொது மேடையில் விவாதிக்க தயாரா? - ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் சவால்
x
ஜார்கண்டில் மாட்டிறைச்சி வைத்திருந்தவர் அடித்துகொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடைய 8 பேர்  ஜாமினில் விடுக்கப்பட்டனர்.  அவர்களை மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா சந்தித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஜெயந்த் சின்ஹாவின் நடவடிக்கையை அவர் படித்த ஹார்வர்டு பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் விமர்சித்திருந்தார். இதற்கு ராகுல்காந்தி ஆதரவு தெரிவித்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பொதுமேடையில் தம்முடன் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா என்று, ராகுலுக்கு ஜெயந்த் சின்ஹா சவால் விடுத்துள்ளார். வன்முறைக்கு என்றுமே தாம் ஆதரவானவன் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்