"இந்தியாவின் பெருமையை 5 பேருக்காவது எடுத்து சொல்லுங்கள்" - பிரதமர் நரேந்திர மோடி

சவுராஷ்டிரா பட்டேல் கலாச்சார சமாஜ் சர்வதேச மாநாடு
இந்தியாவின் பெருமையை 5 பேருக்காவது எடுத்து சொல்லுங்கள் - பிரதமர் நரேந்திர மோடி
x
அமெரிக்காவில் சவுராஷ்டிரா பட்டேல் கலாச்சார சமாஜின் சர்வதேச மாநாடு இன்று நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் காணொலி காட்சி மூலம் உரையாற்றிய பிரதமர் மோடி, மாநாட்டிற்கு வாழ்த்து தெரிவித்தார். உணவகங்கள் மற்றும் சாலையோர உணவகங்கள் நடத்தி வரும் பட்டேல் சமூகத்தினர் இந்தியாவின் பெருமையை அங்கு உள்ளவர்களிடம் எடுத்துக் கூறி அவர்களை, இந்தியா பக்கம் திருப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 5 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தியா பற்றிய சிறப்புகளை சொல்லும் குறும்படங்களை உணவகங்களில் உள்ள தொலைக்காட்சியில் ஒளிபரப்ப வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். 

Next Story

மேலும் செய்திகள்