12 வயதில் சிறுமி கற்சிலையாக மாறுவாள் - ஊரே திரண்டு ஏமாந்து போன அவலம்

புதுக்கோட்டை அருகே, ஜோதிடர் சொன்னபடி சிறுமி கற்சிலையாக மாறுவாள் என்று நினைத்து அவரது பெற்றோர் பூஜை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
12 வயதில் சிறுமி கற்சிலையாக மாறுவாள் - ஊரே திரண்டு ஏமாந்து போன அவலம்
x
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே உள்ள அம்மாபட்டினம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாசிலா. கடவுள் நம்பிக்கை அதிகம் கொண்ட மாசிலா, தனது 12-வது பிறந்தநாளில், கற்சிலையாக மாறிவிடுவார் என அவரது பெற்றோரிடம் ஜோதிடர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஜோதிடர் சொன்னதை அப்படியே நம்பிய மாசிலாவின் பெற்றோர், மாசிலா கற்சிலையாக மாறிவிடுவார் என முடிவெடுத்து, அவரது 12-வது பிறந்தநாளான நேற்று சிறப்பு பூஜை செய்து, மணமேல்குடியில் உள்ள வடக்கூர் அம்மன் கோவிலுக்கு அழைத்து வந்தனர். அங்கு மேளதாளங்கள் முழங்க மாசிலாவிற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. சிறுமி கற்சிலையாக மாறப்போகும் செய்தியைக் கேட்டு, கோவில் வளாகத்தில் 500-க்கும் மேற்பட்ட பொது மக்கள் குவிந்தனர். ஆனால், சிறுமி கற்சிலையாக மாறவில்லை. இதையடுத்து, நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்கள் அனைவரும் திரும்பிச் சென்றனர். இந்தநிலையில், மாசிலா குடும்பத்தினர், மணமேல்குடி கிராமத்தை விட்டு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்