பெண்ணுக்கு கிடைத்த ரூ.45 ஆயிரம் - மத்திய அரசின் திட்டம் மூலம் வந்ததாக வங்கி தகவல்
கோவை மாவட்டம் காளிபாளையம் பகுதியை சேர்ந்த பிருந்தா என்பவர், கனரா வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார்.
கோவை மாவட்டம் காளிபாளையம் பகுதியை சேர்ந்த பிருந்தா என்பவர், கனரா வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். இந்த நிலையில் பிருந்தாவின் கணக்கில் 45 ஆயிரம் ரூபாய் பணம் செலுத்தப்பட்டதாக அவருடைய செல்போனுக்கு எஸ்எம்எஸ் வந்துள்ளது. இதனையடுத்து வங்கிக்கு சென்று கேட்டபோது மத்திய அரசின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் மூலம் பணம் போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த வகையான திட்டதிற்கும் தான் விண்ணப்பிக்கவில்லை என்று பிருந்தா தெரிவித்துள்ளார்.
Next Story