ஆதாருடன் பான் எண் இணைக்க காலக்கெடு நீட்டிப்பு - அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை அவகாசம்
பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசத்தை மத்திய அரசு, அடுத்தாண்டு மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.
ஆதாருடன் பான் எண் இணைக்க காலக்கெடு நீட்டிப்பு
பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசத்தை மத்திய அரசு, அடுத்தாண்டு மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. வருமான வரி தாக்கலின்போது ஆதார் எண்ணை குறிப்பிடுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதனால், பான் கார்டுடன் ஆதாரை இணைப்பதற்கு கடந்த ஆண்டு ஜூலை 31, ஆகஸ்ட் 31, டிசம்பர் 31, இந்தாண்டு மார்ச் 31 என நான்கு முறை அவகாசம் அளிக்கப்பட்டது. இந்நிலையில், மீண்டும் அடுத்தாண்டு மார்ச் 31-ஆம் வரை அவகாசத்தை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
Next Story