7 ஆண்டுகளுக்குள், காச நோய் இல்லாத இந்தியா உருவாக்கப்படும் - பிரதமர் மோடி நம்பிக்கை

நாடு முழுவதும் 24 புதிய மருத்துவக்கல்லூரிகள் துவக்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவிப்பு
7 ஆண்டுகளுக்குள், காச நோய் இல்லாத இந்தியா உருவாக்கப்படும் - பிரதமர் மோடி நம்பிக்கை
x
நாடு முழுவதும் 24 புதிய மருத்துவக்கல்லூரிகள் துவக்கப்படும் என்று பிரதமர் நரேந்திரமோடி அறிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில், 300 கோடி ரூபாய் முதலீட்டில், 200 படுக்கை வசதியுடன் கூடிய எய்ம்ஸ் மருத்துவமனை விரிவாக்கத்திற்கு அடிக்கல் நாட்டி பேசிய அவர், கடந்த 4 ஆண்டுகளில், மத்திய அரசு, சுகாதாரத்துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது என்றார். 

58 மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகளாக தரம் உயர்த்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார். இன்னும் 7 ஆண்டுகளுக்குள், காச நோய் இல்லாத இந்தியா உருவாக்கப்படும் என்றும்
பிரதமர் நரேந்திரமோடி நம்பிக்கை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்