அதிக சத்தம் எழுப்பிய மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

ஒரு வாகனத்திற்கு தலா ரூ.2600 வீதம் அபராதம்
அதிக சத்தம் எழுப்பிய மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
x
சென்னையை அடுத்துள்ள போரூரில் அதிக சத்தம் எழுப்பியபடி சென்ற, 20 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. , தாம்பரம் - மதுரவாயல் செல்லும் பைபாஸ், மற்றும் போரூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து போலீசார் திடீர் ஆய்வு நடத்தினர். '

அப்போது, அதிகளவு சத்தம் எழுப்பியபடி வந்த 20க்கும் மேற்பட்ட, மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஒரு வாகனத்திற்கு தலா 2 ஆயிரத்து 600 வீதம் அபராதம் விதிக்கப்பட்டு, பின்னர் பழைய சைலன்சர் பொருத்தப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது

Next Story

மேலும் செய்திகள்