நாடு முழுவதும் 24 புதிய மருத்துவக்கல்லூரிகள் தொடங்கப்படும் - பிரதமர் மோடி
நாடு முழுவதும் 24 புதிய மருத்துவக்கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் 300 கோடி ரூபாய் செலவில் 200 படுக்கைகளுடன் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை விரிவாக்கத்திற்கு
பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார். விழாவில் பேசிய அவர், கடந்த 4 ஆண்டுகளில் சுகாதாரத்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு நவீன மருத்துவ வசதி கிடைக்கும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
2025ஆம் ஆண்டுக்குள் காசநோயை முற்றிலும் ஒழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மோடி குறிப்பிட்டார். நாடு முழுவதும் 24 புதிய மருத்துவக்கல்லூரிகள் தொடங்க உள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார். மேலும் 58 மருத்துவமனைகள் மருத்துவகல்லூரிகளாக தரம் உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் மோடி குறிப்பிட்டார்.
Next Story