திமுக முன்னாள் எம்.எல்.ஏ. மாரிமுத்துவுக்கு 4 ஆண்டு சிறை

வருமானத்திற்கு அதிகமான சொத்து வழக்கில், திமுக முன்னாள் எம்.எல்.ஏ. உள்ளிட்ட 3 பேருக்கு தலா 4 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திமுக முன்னாள் எம்.எல்.ஏ. மாரிமுத்துவுக்கு 4 ஆண்டு சிறை
x
வானூர் தாலுகா புளிச்சப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த திமுக முன்னாள் எம்.எல்.ஏ. மாரிமுத்து, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரையடுத்து, விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, 60 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கில், முன்னாள் எம்.எல்.ஏ. மாரிமுத்து உள்ளிட்ட 3 பேருக்கு தலா 4 ஆண்டு சிறைத்தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி பிரியா தீர்ப்பளித்தார். அபராத தொகையை கட்ட தவறினால், 6 மாதம் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி பிரியா உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்