சாதி பெயரால் பள்ளி மாணவர்களிடையே மோதல் - சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போலீசார்...
விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே பள்ளி மாணவர்களில் ஒரு பிரிவினர் சாதி மோதலில், ஈடுபட்டதை கண்டித்து போராட்டம் நடைபெற்றது.
இங்குள்ள பாதூர் கிராமத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளியில், ஆயிரத்து 500 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில், ஒரு பிரிவை சேர்ந்த மாணவர்கள், மற்றொரு சாதிப்பிரிவு மாணவர்களை அவதூறாக பேசுவதாகவும், தாக்குதல் நடத்தி வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்கள், மாணவர்களுடன் பள்ளி வாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த திருநாவலூர் போலீசார், சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டதால், மாணவர்கள் தாமதமாக பள்ளிக்கு சென்றனர்.
Next Story