போரின் போது பயன்படுத்திய பீரங்கி சேலம் வந்தது. வியப்புடன் பார்த்து சென்ற பொதுமக்கள்
இந்தியா - பாகிஸ்தான் போரில் பயன்படுத்திய ராணுவ பீரங்கி, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காட்சிக்காக வைக்கப்பட உள்ளது.
1971 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா -பாகிஸ்தான் போரின்போது பயன்படுத்தப்பட்ட விஜயந்தா என்ற ராணுவ பீரங்கி, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர். ஓரிரு நாட்களில், பீரங்கியை சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story