இன்சுலின் மருந்தை இலவசமாக வழங்க கோரி வழக்கு : தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சர்க்கரை நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் இன்சுலின் மருந்தை இலவசமாக வழங்க கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்சுலின் மருந்தை இலவசமாக வழங்க கோரி வழக்கு : தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
x
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு அரசு மருத்துவமனைகளில் இலவசமாக இன்சுலின் மருந்து வழங்க கோரி சென்னை செம்பியத்தை சேர்ந்த தேவராஜன் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்தார்.
உத்தரபிரதேசம், டில்லி, மத்திய பிரதேச மாநிலங்களில் இன்சுலின் மருந்து இலவசமாக வழங்கப்படுவதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், சுப்பையா, சரவணன், மனுவுக்கு மூன்று வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்