துப்பாக்கி சூடு- சி.பி.ஐ. விசாரிக்க கோரி வழக்கு : 2 வாரத்திற்கு விசாரணை ஒத்திவைப்பு

துப்பாக்கி சூடு- சி.பி.ஐ. விசாரிக்க கோரி வழக்கு : 2 வாரத்திற்கு விசாரணை ஒத்திவைப்பு
துப்பாக்கி சூடு- சி.பி.ஐ. விசாரிக்க கோரி வழக்கு : 2 வாரத்திற்கு விசாரணை ஒத்திவைப்பு
x
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மரிய ஜேசு, ஜோயல் ராஜா, மகாராஜா, சக்திவேல், கருப்பசாமி, முத்துக்குமார் மற்றும் மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் அர்ச்சுணன் ஆகியோர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தனர். இதில், துப்பாக்கிச்சூடு சம்பவத்தை சி.பி.சி.ஐ.டி விசாரித்தால் நியாயம் கிடைக்காது என்றும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இந்த மனு நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம். பஷீர்அகமது ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுபோன்ற வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் வழக்கு விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்