நடிகை நிலானிக்கு 15 நாள் காவல், சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு
நடிகை நிலானிக்கு 15 நாள் காவல், சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு
தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக கருத்து பதிவிட்டு கைது செய்யப்பட்ட நடிகை நிலானியை 15 நாள் காவலில் வைக்குமாறு சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி சம்பவத்தை கண்டித்து சமூக வலைதளத்தில் போலீஸ் உடை அணிந்து கருத்து பதிவிட்ட நடிகை நிலானியை குன்னூரில் போலீசார் நேற்று கைது செய்தனர். இதைத்தொடர்ந்து இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை அடுத்த மாதம் 5ஆம் தேதி நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
Next Story