2 ஏக்கர் நிலத்தில் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் விவசாயி

2 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து, ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் வரை சம்பாதித்து வருகிறார் கொடைக்கானலை சேர்ந்த விவசாயி கணபதி...
2 ஏக்கர் நிலத்தில் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் விவசாயி
x
கொடைக்கானல் கீழ்மலை  கிராம‌மான பேத்துப்பாறையை சேர்ந்தவர் கணபதி... இவர் தனது இரண்டு ஏக்கர் நிலத்தில் கடந்த 40 ஆண்டுகளாக இயற்கை முறையில் விவசாயம் செய்துவருகிறார். நூக்கல், பீட்ரூட், முள்ளங்கி உள்ளிட்ட காய்கறிகளையும், எலுமிச்சை, மாம்பழம், ஆரஞ்சு உள்ளிட்ட பழ வகைகளையும் பயிரிட்டுவரும் விவசாயி கணபதி, மற்ற விவசாயிகளையும் இயற்கை முறை விவசாயம் செய்யுமாறு கோரிக்கை விடுக்கிறார். 

Next Story

மேலும் செய்திகள்