தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் : 65 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் : 65 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் : 65 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு
x
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 65 பேருக்கு, தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற முதன்மை நீதிபதி சாருஹாசினி சொந்த ஜாமீனில் விடுதலை செய்தார். இதற்கு, அவர் அரசிடம் எந்த விளக்கமும் கேட்காததால், ஜாமீன் உத்தரவை ரத்து செய்ய கோரி அரசு தரப்பில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு இன்று, நீதிபதி சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது 65 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய மறுத்த நீதிபதி, அவர்களது வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் சமர்பிக்க உத்தரவிட்டு, வழக்கை வருகிற 27 ந்தேதிக்கு ஒத்தி வைத்தார். 

Next Story

மேலும் செய்திகள்