புத்தகங்களை வாங்க தனியார் பள்ளி மாணவர்கள் ஆர்வம் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

11-ம் வகுப்பு புதிய பாடத்திட்டத்தில், நீட் தேர்வுக்கு தேவையான 40 சதவீத வினாக்கள் இருப்பதால் தனியார் பள்ளி மாணவர்களும் புத்தகங்களை வாங்க ஆர்வம்.
புத்தகங்களை வாங்க தனியார் பள்ளி மாணவர்கள் ஆர்வம் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்
x
கோபிசெட்டிப்பாளையம் அருகே கொங்கர்பாளையத்தில் , 201 பயனாளிகளுக்கு 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார். விழாவில் பேசிய அமைச்சர், குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து கொங்கர்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் கூட்டுக்குடிநீர் திட்ட பணிகள் இன்னும் 15 தினங்களில் நிறைவு பெறும் என்றார். மேலும், அத்தாணியிலிருந்து - சத்தியமங்கலம் வரை நான்குவழிச்சாலை அமைக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

11-ம் வகுப்பு புதிய பாடத்திட்டத்தில், நீட் தேர்வுக்கு தேவையான 40 சதவீத வினாக்கள் இருப்பதால் தனியார் பள்ளி மாணவர்களும் புத்தகங்களை வாங்க ஆர்வம் காட்டுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்