மகாராஷ்டிரா மாநிலத்தில் தலித் சிறுவர்களை நிர்வாணமாக்கி தாக்குதல்

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில் பொது கிணற்றில் குளித்ததற்காக 3 தலித் சிறுவர்கள் நிர்வாணமாக தாக்கப்பட்ட கொடூரம் நடந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் தலித் சிறுவர்களை நிர்வாணமாக்கி தாக்குதல்
x
மகாராஷ்டிரா மாநிலத்தில் தலித் சிறுவர்களை நிர்வாணமாக்கி தாக்குதல்

ஜல்காவோம் மாவட்டத்தில் உள்ள வகாதி என்ற கிராமத்தில் இருக்கும் பொதுகிணற்றில் கடந்த 10-ஆம் தேதி மூன்று தலித் சிறுவர்கள் குளித்துள்ளனர். இதனை கண்ட தலித் அல்லாதோர் அந்த சிறுவர்களை ஆடைகளை அணிய விடாமல், நிர்வாணமாக்கி தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி தற்போது வேகமாக பரவி வருகிறது.

இது வெறுப்புணர்வின் உச்சம், வரலாறு நம்மை மன்னிக்காது - ராகுல்காந்தி கண்டனம்

தலித் சிறுவர்கள் தாக்கப்பட்ட வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, அந்த சம்பவத்தை கண்டித்துள்ளார். இது வெறுப்புணர்வின் உச்சம் என்றும், வரலாறு நம்மை மன்னிக்காது என்றும் விமர்சித்துள்ளார். 

தலித் சிறுவர்கள் மீதான தாக்குதல் - கவிஞர் வைரமுத்து கண்டனம்

மகாராஷ்டிராவில் தலித் சிறுவர்களை நிர்வாணமாக்கி தலித் அல்லாதோர் தாக்கியதற்கு கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார். குளிக்கவில்லையே என்று தலித்துகளை 
முன்பு தண்டித்தார்கள் என்றும், குளிக்கிறார்களே என்று இன்று தண்டிக்கிறார்கள் என்றும் வைரமுத்து விமர்சித்துள்ளார். தேசம் எழுந்து நின்று வெட்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

 



Next Story

மேலும் செய்திகள்