புதிய பாடத்திட்ட புத்தகங்கள் விரைவில் தனியார் பள்ளிகளுக்கும் முழுமையாக வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

தனியார் பள்ளிகளுக்கு 10 நாட்களுக்குள் புதிய பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டுவிடும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
புதிய பாடத்திட்ட புத்தகங்கள் விரைவில் தனியார் பள்ளிகளுக்கும் முழுமையாக வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
x
சென்னை மாநகராட்சி எழும்பூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை, பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார். அதனைதொடர்ந்து தந்தி தொலைக்காட்சிக்கு பிரத்யேகமாக பேட்டியளத்த அவர், அரசு  பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டு விட்டதாகவும், தனியார் பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள், விரைவில் வழங்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்