வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்
பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்..
மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெற்றது. பச்சை பட்டுடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் பவனி வந்த அழகரை கைகளில் தீபம் ஏந்தி ஏராளமான பக்தர்கள் வரவேற்றனர். இன்று காலை சுமார் 6 மணியளவில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். அப்போது பக்தர்கள் எழுப்பிய கோவிந்தா, கோவிந்தா என்ற கோஷம் விண்ணைப் பிளந்தது. ஆற்றில் இறங்கிய அழகர் மீது பக்தர்கள் மலர்களை தூவியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் பரவசம் அடைந்தனர்.
Next Story