மணிக்கு 2 செ.மீ. அளவு உயரும் ஆறு - கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாயம்

x

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்யாவில் சரயு ஆற்றில் ஆபத்தான அளவைத் தாண்டி தண்ணீர் பாய்ந்தோடுவதால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால், சரயு ஆற்றுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அயோத்யாவில், ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 2 சென்டி மீட்டர் உயர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆபத்தான அளவைத் தாண்டி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், நவாப்காஞ்ச், கோண்டா பஸ்டி உள்ளிட்ட கரையோர பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்