மலைப்பாம்பு.. முதலை குட்டிகள் என பார்சலுக்குள் 140 விலங்குகள் கடத்தல் - அதிகாரிகள் அதிர்ச்சி

x

மலைப்பாம்பு.. முதலை குட்டிகள் என பார்சலுக்குள் 140 விலங்குகள் கடத்தல் - அதிகாரிகள் அதிர்ச்சி

வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட வெள்ளை கங்காரு, சிறிய குரங்கு உட்பட 140 வகையான விலங்குகளை மிசோரம் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மியான்மரில் இருந்து வந்த பார்சலை மிசோரத்தை சேர்ந்த சுங்கத்துறை அதிகாரிகள் பரிசோதித்தனர்.

அதில், 30 ஆமைகள், இரண்டு மர்மோசெட் குரங்குகள், 22 மலைப்பாம்புகள், உடும்புகள், முதலலை குட்டிகள், அரிய பறவை, பூனை, வெள்ளை கங்காரு அடைத்து வைக்கப்பட்டது தெரிய வந்தது. மொத்தமாக, 140 விலங்குகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் பார்சல் வைத்திருந்த 3 பேரை கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்