இன்று காலை 10.30 மணிக்கு பிரதமர் மோடி உரை

x

'வளர்ச்சி அடைந்த இந்தியா 2047 இளைஞர்களின் குரல்' என்ற திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்க உள்ளார். நாடு முழுவதும் ஆளுநர் மாளிகைகளில் நடைபெறும் பயிலரங்குகளில், காலை 10.30 மணியளவில் காணொலி காட்சி மூலம் பிரதமர் உரையாற்ற உள்ளார். வளர்ச்சி அடைந்த இந்தியா 2047 என்பது, சுதந்திரத்தின் நூற்றாண்டான 2047-க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சி, சமூக முன்னேற்றம், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் நல்லாட்சி உள்ளிட்ட வளர்ச்சியின் பல்வேறு அம்சங்களை இது உள்ளடக்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்