"இப்போவாச்சும் இத புரிஞ்சுக்கோங்க" - கொந்தளித்த பா.ரஞ்சித்

x

அடுத்த தலைமுறையையும் விழுங்கி கொண்டிருக்கும் சாதியை ஒழிக்க அனைவரும் ஒன்றிணைவோம் என இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். நாங்குநேரி சம்பவத்தை கண்டித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், தமிழ்நாட்டில் சாதி உணர்வு என்பது எப்படி பட்டியலின மக்களுக்கு எதிரான வெறுப்பாக வளர்த்தெடுக்கபட்டு இருக்கிறது என்கிற உண்மை நிலவரத்தை இப்போதாவது சரியாக புரிந்துகொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஐந்துக்கும் மேற்பட்ட பட்டியலின மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தமிழ்நாட்டில் நிகழ்த்தப்பட்டிருப்பதாக இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்