`இந்த ஆணவம் எங்க இருந்து வருது?' - ரசிகரை அடித்து அவமானப்படுத்தி பிரபல பாடகர் அட்டூழியம்

x

பிரபல பாடகர் ஆதித்யா நாராயண் இசை நிகழ்ச்சியின் போது ரசிகரை தாக்கி, அவரது செல்போனை பறித்து தூக்கி எறிந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் பிலாயில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பாடிக்கொண்டிருந்த பாடகர் ஆதித்யா நாராயண், திடீரென ரசிகர் ஒருவரை மைக்கால் தாக்கியுள்ளார். பின்னர் அவரது செல்போனை பிடுங்கி வீசியுள்ளார். ஆதித்யா நாராயண் இவ்வாறு நடந்து கொண்டதற்கான காரணம் தெரியாத நிலையில், அவரது செயலுக்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. ஆதித்யா நாராயண், பிரபல பாடகர் உதித் நாராயணின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்