திரைத்துறையில் புயலை கிளப்பிய விவகாரம்..விஷால் சொன்னது உண்மை.. அதிரடி காட்டிய

x

இந்தியில் மார்க் ஆண்டனி திரைப்படத்தை வெளியிட தணிக்கை அதிகாரிகளுக்கு 6.5 லட்ச ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக விஷால் X தளத்தில் வீடியோ பதிவிட்டார். திரைத்துறையில் புயலை கிளப்பிய இந்த விவகாரம் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் தெரிவித்தது. இந்நிலையில், விஷால் குறிப்பிட்ட தரகர்கள், அதிகாரிகள் தொடர்புடைய 4 இடங்களில் சோதனையில் ஈடுபட்ட சிபிஐ அதிகாரிகள், முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். விசாரணையில் குற்றச்சாட்டு உண்மை என தெரிய வந்ததையடுத்து, ஜிஜா ராமதாஸ், ராஜன் மற்றும் அதிகாரிகள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.


Next Story

மேலும் செய்திகள்