"என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி" - இயக்குநர் சித்திக் மறைவிற்கு நடிகர் சூர்யா இரங்கல்

x

என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி" - இயக்குநர் சித்திக் மறைவிற்கு நடிகர் சூர்யா இரங்கல்.

தங்களது நினைவுகள் எங்களுடன் எப்போதும் பயணிக்கும் என இயக்குநர் சித்திக் மறைவுக்கு நடிகர் சூர்யா இரங்கல் தெரிவித்துள்ளார். பிரண்ட்ஸ் படம் தனக்கு முக்கியமான படம் எனவும், சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினால் மனமுவந்து பாராட்டுவார் எனவும் குறிப்பிட்டுள்ளார். படப்பிடிப்பில் கோபமாகவோ, குரலை உயர்த்தியோ பார்த்ததில்லை என குறிப்பிட்டுள்ள சூர்யா, நடிகராக தன் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி என நெகிழ்ந்துள்ளார். சித்திக்கை பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கு சூர்யா இரங்கல் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்