வழிகாட்டும் சூர்யா... சரியான பாதையில் ரசிகர்கள்...

x

கள்ளக்குறிச்சி அருகே சூர்யா நற்பணி இயக்கம் சார்பில் ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் இலவச மாலை நேர பயிலகம் திறக்கப்பட்டுள்ளது அனைவரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது...

விளம்பார் கிராமத்தில் சூர்யா நற்பணி இயக்கத்தின் சார்பில் வறுமையில் வாடும் மாணவர்களுக்காக அப்பகுதியைச் சேர்ந்த சூர்யா ரசிகர்கள் "சிகரம்" என்ற பெயரில் இலவச மாலை நேர பயிலகத்தை திறந்துள்ளனர். இந்த பயிலகத்தில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். சூர்யா, "அகரம் பவுண்டேஷன்" என்ற பெயரில் ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு கல்வி சேவை ஆற்றி வரும் நிலையில் அவரது ரசிகர்களும் மாலை நேர இலவச பயிலகம் அமைத்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்