சல்மான் கான் வீட்டில் துப்பாக்கிச்சூடு - விசாரணையில் அதிர்ச்சி தரும் புதிய தகவல்

x

சல்மான் கான் வீட்டில் துப்பாக்கிச்சூடு - விசாரணையில் அதிர்ச்சி தரும் புதிய தகவல்

சல்மான் கான் வீட்டில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விக்கி குப்தா, சாகர் பால் என்ற இரண்டு இளைஞர்கள் குஜராத்தில் கைது செய்யப்பட்டனர். அதன் பிறகு அவர்கள் மும்பை அழைத்து வரப்பட்டனர். இந்த வழக்கில் தினந்தோறும் பல்வேறு புதிய தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் துப்பாக்கி சூட்டிற்கு பயன்படுத்திய துப்பாக்கியை இன்னும் போலீசார் கண்டெடுக்கவில்லை. இந்நிலையில் இது தொடர்பான விசாரணையின் போது குற்றத்திற்கு பயன்படுத்திய துப்பாக்கியை தாபி ஆற்றில் வீசியதாக குற்றப்பிரிவுக்கு தகவல் கிடைத்ததை அடுத்து மும்பை குற்றப்பிரிவு போலீசார் சூரத் விரைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்