ரூ.16 கோடி மோசடி..கம்பி என்னும் பிரபல தயாரிப்பாளர் | Tamilcinema | Police

x

சென்னையில் தனியார் நிறுவனம் நடத்தி வரும் பாலாஜி என்பவர், சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். அதில், சினிமா தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் 200 கோடி ரூபாய் மதிப்பில் திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டத்தை தொடங்க உள்ளதாகவும், அதில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் என ஆசை வார்த்தை கூறி 16 கோடி ரூபாய் தன்னை முதலீடு செய்ய வைத்து ஏமாற்றியதாகவும் புகார் அளித்தார். பின்னர் நடத்திய விசாரணையில், போலியான ஆவணங்களை காண்பித்து ரவீந்தர் சந்திரசேகரன் ஏமாற்றியது தெரியவந்ததாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது. இதனையடுத்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தது.


Next Story

மேலும் செய்திகள்