ஒரே பேட்டி.. தலைகீழான வாழ்க்கை மேலும் மன்சூருக்கு விழப்போகும் பேரிடி - குஷ்பூ எடுத்த ஷாக்கிங் முடிவு

x

நடிகர் மன்சூர் அலி கான் விவகாரம் குறித்து தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என, நடிகையும், மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பூ தெரிவித்துள்ளார்.

நடிகை திரிஷா குறித்து மன்சூர் அலிகான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், எக்ஸ் தளத்தில் நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பூ பதிவிட்டுள்ளார்.

அதில், மன்சூர் அலிகான் பிரச்சனை குறித்து தனது மூத்த அதிகாரியிடம் எடுத்துச் சென்றுள்ளதாகவும், இதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இப்படிப்பட்ட அசுத்தமான மனதை யாரும் விட்டுவிட முடியாது என்றும், தன்னை பற்றி மிகவும் கேவலமான மனநிலையில் பேசியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பெண்களைப் பாதுகாக்கவும், அவர்களுக்கு கண்ணியத்தை ஏற்படுத்தவும் போராடும்போது, ​​​​அத்தகைய ஆண்கள் நம் சமூகத்தில் தொந்தரவாக இருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் த்ரிஷாவுடன் தானும் துணை இருப்பதாக குஷ்பூ தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்