"இதெல்லாம் தனிப்பட்ட விஷயம்.." - ஜோதிகா ஓப்பன் டாக்

x

ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்ற மக்களவை தேர்தலில் நடிகை ஜோதிகா வாக்களிக்க வராதது, விமர்சனத்துக்கு உள்ளானது. இதுகுறித்து, சென்னையில் நடைபெற்ற பிரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில், செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த நடிகை ஜோதிகா,

"நான் தொடர்ந்து வாக்களித்து வருகிறேன்... ஆனால் சில நேரங்களில் வேலைக்காக வெளியில் செல்வதால் வாக்களிக்க முடிவதில்லை, சில நேரங்களில் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும். இதெல்லாம் தனிப்பட்ட விஷயம். அதற்கு மதிப்பளியுங்கள்" என தெரிவித்தார். இதனையடுத்து, நிறைய சமூக கருத்துகளை பேசும் நீங்கள், ஏன் அரசியலுக்கு வரக்கூடாது என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, "நான் அரசியலுக்கு வர வாய்ப்பே இல்லை" என நடிகை ஜோதிகா ஓப்பனாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்